சில பொதுஅறிவுத் தகவல்கள்..!

>> Wednesday, December 24, 2008

  • ஞானபீட விருதை உருவாக்கியவர் - ரமாதேவி ஜெயின்.
  • இந்திய மாதர் சங்கம் எந்த நகரில் தோற்றுவிக்கப்பட்டது - சென்னை.
  • புதுச்சேரி உருவானது - 1674ம் ஆண்டு.குவாண்டம் தியரியை உருவாக்கிய விஞ்ஞானி - மாக்ஸ் பிளாங்க்.
  • ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி - மைக்ரோஃபோன்.
  • நவீன சுற்றுலாவின் தந்தை என்றழைக்கப்படுபவர் - தாமஸ் குக்.
  • பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை - நைலான்.
  • மின்சாரத்தை அளக்கும் கருவி - அம்மீட்டர்.
  • நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி - பாரத ஸ்டேட் வங்கி.
  • அரியானா மாநிலமானது - 1966ம் ஆண்டு.
  • இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.
  • டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
  • இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
  • வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.
  • முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
  • ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
  • இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர் மெக்காலே.
  • எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.
  • முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.
  • செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் - சிவாஜி கணேசன்.
  • உலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் உள்ள இடம் வாடிகன்.
  • ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது ரோம்.
  • ஐ. நா. சபையின் தந்தை என்று கூறப்படுபவர் கோர்டல் ஹால்.
  • தங்க நகைகளின் தரத்திற்கு வழங்கப்படும் சான்றிதழின் பெயர் ஹால்மார்க்.
  • உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.

Read more...

இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கிச்சண்டை

>> Friday, December 19, 2008

ஆந்திர மாநிலத்தில் உள்ள போலீஸூக்கு தானியங்கி துப்பாக்கி தரப்பட்டுள்ளது. அதில் ஒரு போலீஸ்காரர் தெரியாமல் அவரிடம் உள்ள துப்பாக்கியை வெடிக்க செய்துவிட்டார். எங்கே தான் மாட்டிக் கொள்வேம் என்ற அச்சத்தில் அவர் போலீஸ் ஸ்டேசனில் நூழைந்து நக்சலைட் தன்னை துப்பாக்கியால் தாக்குவதாக கூற மற்ற போலீஸூம் தங்கள் பங்கிற்கு தங்களிடம் உள்ள துப்பாக்கியால் அவர் கூறிய திசையை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 40 நிமிட கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தியபின் நக்சலைட் ஒடுக்கப்பட்டதாக துப்பாக்கிச் சண்டையை முடித்துக்கொண்டனர். உடனடியாக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து நக்சலைட்களை ஒடுக்கியதற்கு மேலிடத்திலிருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாராட்டை நேரில் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட மேலிடத்திலிருந்து உயர் அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர்..

சம்பவ இடத்தை பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போலீஸ் ஸ்டேசனில் நக்சலைட் தாக்கியதாக சொல்லிருந்தனர். இவர்கள் நக்சலைட் என துப்பாக்கி சூடு நடத்திய தடங்கள் தெரிந்தது.. ஆனால் நக்சலைட் எதும் திரும்ப தாக்கியதிற்கான எந்த தடமும் இங்கு காணப்படவில்லை. சந்தேகம் கொண்ட உயர் அதிகாரிகள். முதலில் தகவல் அளித்த அந்த போலீஸ்க்காரரை விசாரித்ததில் அவர் தான் தன் துப்பாக்கியை தவறாக பயன் படுத்திவிட்டதைக் கூறியுள்ளார். தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என இப்படி வதந்தியை பரப்பியதாகவும் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.

இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கி சண்டை நடத்திய போலீஸ் கூட்டத்தை என்னவென்று சொல்வது..

வதந்தியை கிளப்பிய போலீஸ்க்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவுபிறப்பித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் இல்லாத நக்சலைட்டுக்காக நடந்த துப்பாக்கி சண்டை மக்களிடம் கேலிக்கூத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

பொது அறிவுக் களஞ்சியம்

>> Wednesday, December 17, 2008

  • அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.
  • வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.
  • திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.
  • ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.
  • உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
  • மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.
  • சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.
  • ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.
  • ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.
  • வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
  • காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.
  • யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
  • தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.
  • ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.
  • கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.
  • சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.
  • பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.
  • பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். :) மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.
  • 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.
  • நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.
  • தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.
  • பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.
  • பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.
  • தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.

Read more...

அருகம்புல்லின் பயன்கள்

>> Tuesday, December 16, 2008

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.
குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

  • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  • சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  • நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • புற்று நோய்க்கு நல்ல மருந்து.
  • உடல் இளைக்க உதவும்இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

நன்றி!!!!

Read more...

விபத்துகளும் முதலுதவியும்

>> Sunday, October 19, 2008


இன்றைய வாழ்வில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. கையில் கத்தி போன்ற ஆயுதங்கள் பட்டு காயம் ஏற்படுவது, தீப்பட்டு புண்கள் ஏற்பட்டுவது , மின்சாரம் போன்றவற்றால் தாக்கப்பட்டு மூர்ச்ச்சை அடைவது, தவறியோ வேண்டுமென்றோ சாப்பிடக்குடாத பொருள்களைச் சாப்பிட்டு விடுவது, நீரில் மூழ்கி விடுவது இப்படி எத்தனையோ விபத்துகள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்து வருகின்றன. அவை சிறியவைகளாகவோ, பெரியவைகளாகவோ இருக்கலாம். இவற்றால் காயங்களும் ,அதிர்ச்சியும் , ஆபத்தும் ஏற்படுகின்றன. காயங்கள் மிகச்சிறியவையாகவும் சாதாரணமானவையாகவும் இருக்கலாம். சில நேரங்களில் அவை பலத்தவையாகவும் , உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியவையாகவும் இருக்க கூடும். விபத்து ஏற்பட்டதும் செய்வது அறியாது திகைத்து நிற்கலாகாது. முறை தெரியாமல் சிகிச்சை அளிக்க முயன்றால் அது ஆபத்தில் முடியக் கூடும். எனவே முதல் உதவி பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. விபத்துக்கு உள்ளானவருக்கு உடனடியாகவும் , மருத்துவரின் உதவி கிடைக்கும் வரையிலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

ஒவ்வொருவரும் முதல் உதவியைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ , அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவிப் பெட்டி ஒன்று இருப்பதும் முக்கியம். ஆனால் நம்மில் ஒரு சிலரின் வீடுகளில் தான் அதிசயமாக முதல் உதவிப் பெட்டியைக் காண முடிகிறது. பெரும்பாலனவர்களின் வீடுகளின் மூதல் உதவி பெட்டீயோ அல்லது அதற்குத் தேவையான பொருட்கள் இருப்பதில்லை. வாகனங்களிலும் , பள்ளி போன்ற இடங்களிலும் முதல் உதவி பெட்டி இருப்பது அவசியம்.

முதல் உதவிப் பெட்டியில் வேண்டியவை
௧. ஒரங்குல பிளாஸ்திரிச் சுருள்
௨. மூன்றங்குல சதுரக் காரத் துணிகள்
௩. கிருமி நிக்கப்பட்ட பலவகை கட்டுத் துணிகள்
௪. முக்கோணக் கட்டுத் துணிகள்
௫. இரண்டு முழச் சதுரக் காரத் துணிகள்
௬. தீப்புண்ணுக்கு இடும் களிம்பு
(அமிலக் களிம்பு சிறந்தது)
௭. அமோனிய சாராயக் கரைசல்
(ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
௮. ௨ சதவிகித அயோடின் கரைசல்
(ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
௯. இழுக்க நீளாத முறுக்குக் கட்டுத்துணி
௧0. கத்தரிக்கோல்
௧௧. ௩ அங்குல நீளமுள்ள பிளவு சிம்புகள்
௧௨. ௧ அங்குலம், ௨ அங்குலம் அகலம் உள்ள கட்டுத்
துணிகள்
௧௩. கண்ணுக்குப் பயன்படுத்தக்கூடிய கிருமி நீக்கம்
செய்யப்பட்ட விளக்கெண்ணெய் அல்லது ஏதாவது
கனிய எண்ணெய் (குழாய்களில் இருக்க வேண்டும்)
௧௪. போரிக் அமிலக் கரைசல்
௧௫. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண
உப்பு குறைந்தது ௧ பவுண்டு (ஈரம்
இல்லாதிருக்க வேண்டும்.

விபத்து நடந்தவுடன் கவனிக்க வேண்டியவை

௧. விபத்து நடந்ததும், விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கப் போதுமான காற்றுக்கூட விடாமல் பலர் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு குழப்பத்தை அதிகமாக்குகிறாகள். இது தவிர்க்கப்பட வேண்டும். இத்தகையவர்களை விலக்கிவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவு செய்ய வேண்டும்.

௨. நீங்கள் அளிப்பது முதல் உதவிதானே ஒழிய முழுச் சிகிச்சையல்ல. எனவே விரைவாக மருந்துவருக்கு ஆள் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் ஆளிடம் என்ன நடந்தது விபத்துக்குள்ளானவரின் தற்போதைய நிலை என்ன , என்னென்ன குறிகள் காணப்படுகின்றன என்பதைச் சொல்லி அனுப்ப வேண்டும். தேவையிருந்தால் குறிப்பெழுதி கொடுத்தனுப்ப வேண்டும். அப்போது தான் டாக்டர் அதற்கேற்ப மருந்துகளையும் , கருவிகளையும் கொண்டுவர முடியும். டாக்டரின் மருந்துப் பெட்டி ஒரு முழு மருத்துவமனையல்ல. எனவே எல்லா கருவிகளையும் அவர் சுமந்து கொண்டு வரவும் முடியாது. என்ன நடந்திருக்கிறது அல்லது எந்த வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர் அறியவும், அதற்கேற்ப கருவிகளையும், மருந்துகளையும் அவர் கொண்டுவரவும் நீங்கள் அனுப்பவும் தகவல்கள் உதவ வேண்டும்.

௩.விபத்துகள் நேரும்போது நோயாளிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கலாம்: அவர் பல வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எந்தக் காயத்தால் அதிக ஆபத்து ஏற்பட உள்ளதோ அதற்கு முதலில் முதலுதவி அளிக்க முயல வேண்டும். அற்ப காயங்களுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய காயங்களுக்கு முதல் உதவி செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது.ஆபத்து நேரங்களில் பின்கண்ட விஶயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.: அ) மூச்சுத் திணறல் , ஆ)அதிர்ச்சி, இ) இரத்தபோக்கு, ஈ) மயங்கி மூர்ச்சையாதல்.

௪. சுய நினைவு இழந்தவர்களுளூக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது.

௫. தரையில் விழுந்து கிடக்கும் நோயாளியின் உடலில் உள்ள வெப்பம் வெகு விரைவில் தரைக்குச் சென்று விடும். எனவே , நோயாளியை ஏதாவது படுக்கையில் படுக்க வைத்து சூடு தணியாமல் போர்வையாலோ , கம்பளியாகவோ உடலை மூட வேண்டும்.

டாக்டர் நோயாளிக்கு தரும் முதல் டானிக் தைரியம் தான். முதலுதவி செய்பவருக்கும் இது பொருந்தும். பாதிக்கப்பட்டவர் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் பார்த்துக் க் கொள்ள வேண்டும். சுற்றியிருப்போர் அழுவதும் , முதலுதவி செய்பவர் நம்பிக்கை இழந்தவராகக் காணப்படுவதும் நோயாளிக்கு பயத்தை ஏற்படுத்தலாம். அல்லது பயத்தை அதிகமாக்கலாம். நீங்கள் தரும் நம்பிக்கையே நோயாளியைக் காப்பாற்ற அதிகம் உதவும் என்பதை மறக்கக் கூடாது.

கட்டுப் போடுதல்
காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும். காயம் கடுமையானதாக இருக்கும் போதும், எலும்பு முறிவோ, மூட்டு நழுவுதலோ, மூட்டூப் பிறழ்ச்சியோ ஏற்படும் போதும் கட்டுப் போடுவது மிகவும் அவசியமாகிறது.

மருந்துத் துணிகள் , பற்றுகள், சிம்புகள் போன்றவை குறிப்பிட்ட இடத்திலிருந்து நழுவாமல் இருக்கவும், அங்கம் திசுக்களுக்கு ஆதரவு அளிக்கவும் , அங்கக் குறைபாட்டைச் சீர்படுத்தவும் , இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வீக்கம் ஏற்படாமல் தடுக்க அல்லது வீக்கத்தைக் குறைக்கவும், அங்கம் அல்லது உறுப்பின் இயக்கத்திற்கு எல்லை வகுக்கவும் கட்டுக்கட்டுதல் கடைப்ப்டிக்கப் படுகிறது.

எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகைக் கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிந்திருப்பது அவசியம். சுத்தமான பஞ்சு , துணி ஆகியவற்றையே கட்டுப்போட பயன்படுத்த ~வேண்டும். அசுத்தமான துணியால் கட்டுப்போட்டால் அதிலுள்ள கிருமிகள் காயங்களின் வழியே உடலினுள் சென்று தீங்கு விளைவிக்கலாம். கட்டுக் கட்ட பயன்படுத்தப்படும் துணி, பஞ்சு போன்றவற்றை நீராவியில் வேகவைத்து தூய்மையாக்கி, சுத்தமான காகிதம் அல்லது துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

கட்டுத் துணிகளில் சுருள் கட்டுத்துணி, முக்கோண வடிவத்துணி, பல முனை கொண்டது போன்ற சிறப்பு வகைகள் பலவும் உண்டு.

Read more...

பதிவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை - திருடப் படும் பதிப்புகள் - தமிழ் இதழ்களின் யோக்கியதை (ஆதாரத்துடன்......)

>> Friday, October 17, 2008

தமிழிஸ் , தமிழ்மணம் போன்ற மேலும் பல திரட்டிகளும் எடுத்துக் கொண்ட கடின முயற்சிகளாலும் , பதிவர்களுக்கு கொடுத்துவரும் சீரிய ஊக்குவிப்பினாலும் தமிழ் பதிவு உலகம் என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது மகிச்சியான விசயமே.

புதிய புதிய பதிவர்கள் தினந்தோறும் உருவாகிறார்கள், எழுத்துப் பணியில் வாய்ப்பு என்பது ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும் , ஆனால் வலைப்பூ உலகத்தால் அனைவருமே தங்களது எண்ணங்களை, சிந்தனைகளை , ஆசைகளை, கடந்து போன பசுமையான நினைவுகளை, சோகங்களை , வேதனைகளை என எல்லா விஷயங்களையும் மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

நம்முடைய எழுத்திற்கும் இவ்வளவு வரவேற்பா என பலரும் பல நேரங்களில் திகைத்துப் போனதுண்டு , இதனால் கிடைக்கும் ஊக்கங்களும் வரவேற்பும் பதிவர்களை மேலும் முன்னேறி செல்லத் தூண்டுகிறது , புதிய எல்லைகளை பதிவர்கள் அடைய துணை செய்கிறது.

பெயரில்லாமலும் , முகமூடி போட்டுக் கொண்டும் சில அறிவு மேதைகளும் , சான்றோர்களும் கொடுக்கும் பின்னூட்டங்கள் மற்றும் சில முகமில்லாதவர்களின் ஆபாசப் பின்னூட்டங்கள் போன்றவை , சில நேரங்களில் பதிவர்களை மனமுடைய செய்து அவர்களின் ஊக்கத்தை சீர்குலைப்பதாக அமைந்து விடுவதும் உண்டு.

இலக்கியத் தரமாக இப்படி எழுத வேண்டும் ,அப்படி எழுத வேண்டும் என்று அவசியமில்லாத அறிவுரைகளைக் கூறி பதிவர்களின் பயணத்தை சீர்குலைக்கின்றனர் சிலர் ,

இது போன்ற அறிவு ஜீவிகளின் தாக்குதல்களுக்கு சில நேரங்களில் முன்னணி வலைப்பதிவர்கள் கூட மதிப்பளிப்பது வேதனையாக உள்ளது .
இது போன்ற மேதாவித் தன விமர்ச்சனகளைப் புறந்தள்ளி நாம் நமது பாதையில் தொடர்ந்து நடை போடுவதே அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை ஆகும் .

சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டது போல மரபு இலக்கணம் மீறாமல் இன்று வைரமுத்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தால் அவரது நிலைமை என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் , எழுத்து பேச்சு என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை சந்தித்து வருவதுதான் வளர்ச்சியின் அடையாளம் .

இன்றைக்கு நீங்கள் சுஜாதாவின் எழுத்தைப் படியுங்கள், ஜெய காந்தனின் எழுத்தைப் படியுங்கள் அவர்களின் நடையைப் பாருங்கள் , அதைப் போல பழகி எழுதுங்கள் என்று கூறுகிறார்களே , சுஜாதாவின் எழுத்து நடையை விரும்புபவர்கள் அவரது எழுத்தையே படித்து விடுவர் அல்லவா ?

இன்று ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு நாளுக்கு ஆயிரம் ஹிட்டுகள் விழுகிறது என்றால் அது அவரின் எழுத்தில் உள்ள தனித்தன்மைக்காக மட்டுமே .

பதிவர்களின் பதிவுகள் எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என்பதை இது போல மேதாவித்தனமாகப் பின்னூட்டமிடும் சான்றோர்கள் தான் அறியவில்லை, தமிழ் பதிவர்களின் பதிவுகளின் அருமை பல பத்திரிக்கைகளுக்கு தெரிந்தே உள்ளது .

வலைப்பூ உலகத்தில் பதியப்பட்ட பதிவுகள் அப்படியே திருடப்பட்டு இதழ்களில் வெளியிடப்படுகிறது.
ஆதாரம்:

கம்ப்யூட்டர் உலகம் இந்த (அக்டோபர்) மாத இதழில் நண்பர் அறிவிழி சென்ற செப்டம்பர் மாதம் எழுதிய மென்பொருளாளர்கள் பற்றிய பதிவு வரி மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் கம்ப்யூட்டர் இந்த (அக்டோபர்) மாத இதழில் நண்பர் தமிழ் நெஞ்சம் சென்ற செப்டம்பர் மாதம் எழுதிய கணினி பற்றிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது .
(இது போல நிறைய இருக்கும் என்றே எண்ணுகிறேன் )

பதிவுகள் பதிவர்களிடம் அனுமதி கேட்காமல் அப்படியே அச்சு பிசகாமல் வெளியிடப்படுவது திருட்டுதானே .
பதிவர்களுக்கு இது ஒரு இழப்பாக தெரிந்தாலும் , பெரும்பாலும் தொழில்முறையில் இல்லாமல் எழுதும் பதிவர்களுக்கு ஒரு வகையில் இது பெருமையாகவும் , ஊக்கமாகவும் இருக்கும் .

சில பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பதிவுகளாக வழங்கும் போது பதிவர்கள் , பத்திரிகை செய்தியை அப்படியே (copy& paste ) அச்சிடுவதை தவிர்த்து தாங்கள் படித்த அந்த செய்தியை தங்கள் கண்ணோட்டத்தில் சொந்தமாக எழுதி வெளியிடுவது பதிவுலகின் தரத்தை மேலும் உயர்த்தும் என நான் நம்புகிறேன் .

பதிவர்களின் தரம் இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கும் பொது தேவையில்லாமல் இது போல வரும் மேதாவித் தனமான , அல்லது ஆபாசமான பின்னூட்டங்களை கண்டு பதிவர்கள் கலக்கம் அடையாமல் தொடர்ந்து தங்களது நடையிலேயே சீரிய முறையில் எழுதி வந்தால் பதிவுலகிற்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவே தெரிகிறது......



என்றென்றும் நன்றியுடன் உங்கள் சுந்தரேசன்

Read more...

மரணம்

>> Friday, February 2, 2007

என்னுயிரோஉன்னிடத்தில்
உன்னுயிரோஎன்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?

Read more...

Back to TOP