சில பொதுஅறிவுத் தகவல்கள்..!

>> Wednesday, December 24, 2008

  • ஞானபீட விருதை உருவாக்கியவர் - ரமாதேவி ஜெயின்.
  • இந்திய மாதர் சங்கம் எந்த நகரில் தோற்றுவிக்கப்பட்டது - சென்னை.
  • புதுச்சேரி உருவானது - 1674ம் ஆண்டு.குவாண்டம் தியரியை உருவாக்கிய விஞ்ஞானி - மாக்ஸ் பிளாங்க்.
  • ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி - மைக்ரோஃபோன்.
  • நவீன சுற்றுலாவின் தந்தை என்றழைக்கப்படுபவர் - தாமஸ் குக்.
  • பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை - நைலான்.
  • மின்சாரத்தை அளக்கும் கருவி - அம்மீட்டர்.
  • நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி - பாரத ஸ்டேட் வங்கி.
  • அரியானா மாநிலமானது - 1966ம் ஆண்டு.
  • இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.
  • டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
  • இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
  • வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.
  • முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
  • ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
  • இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர் மெக்காலே.
  • எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.
  • முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.
  • செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் - சிவாஜி கணேசன்.
  • உலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் உள்ள இடம் வாடிகன்.
  • ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது ரோம்.
  • ஐ. நா. சபையின் தந்தை என்று கூறப்படுபவர் கோர்டல் ஹால்.
  • தங்க நகைகளின் தரத்திற்கு வழங்கப்படும் சான்றிதழின் பெயர் ஹால்மார்க்.
  • உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.

Read more...

இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கிச்சண்டை

>> Friday, December 19, 2008

ஆந்திர மாநிலத்தில் உள்ள போலீஸூக்கு தானியங்கி துப்பாக்கி தரப்பட்டுள்ளது. அதில் ஒரு போலீஸ்காரர் தெரியாமல் அவரிடம் உள்ள துப்பாக்கியை வெடிக்க செய்துவிட்டார். எங்கே தான் மாட்டிக் கொள்வேம் என்ற அச்சத்தில் அவர் போலீஸ் ஸ்டேசனில் நூழைந்து நக்சலைட் தன்னை துப்பாக்கியால் தாக்குவதாக கூற மற்ற போலீஸூம் தங்கள் பங்கிற்கு தங்களிடம் உள்ள துப்பாக்கியால் அவர் கூறிய திசையை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 40 நிமிட கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தியபின் நக்சலைட் ஒடுக்கப்பட்டதாக துப்பாக்கிச் சண்டையை முடித்துக்கொண்டனர். உடனடியாக மேலிடத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து நக்சலைட்களை ஒடுக்கியதற்கு மேலிடத்திலிருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாராட்டை நேரில் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட மேலிடத்திலிருந்து உயர் அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர்..

சம்பவ இடத்தை பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போலீஸ் ஸ்டேசனில் நக்சலைட் தாக்கியதாக சொல்லிருந்தனர். இவர்கள் நக்சலைட் என துப்பாக்கி சூடு நடத்திய தடங்கள் தெரிந்தது.. ஆனால் நக்சலைட் எதும் திரும்ப தாக்கியதிற்கான எந்த தடமும் இங்கு காணப்படவில்லை. சந்தேகம் கொண்ட உயர் அதிகாரிகள். முதலில் தகவல் அளித்த அந்த போலீஸ்க்காரரை விசாரித்ததில் அவர் தான் தன் துப்பாக்கியை தவறாக பயன் படுத்திவிட்டதைக் கூறியுள்ளார். தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என இப்படி வதந்தியை பரப்பியதாகவும் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.

இல்லாத நக்சலைட்டுக்கு 40 நிமிடம் துப்பாக்கி சண்டை நடத்திய போலீஸ் கூட்டத்தை என்னவென்று சொல்வது..

வதந்தியை கிளப்பிய போலீஸ்க்காரர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவுபிறப்பித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் இல்லாத நக்சலைட்டுக்காக நடந்த துப்பாக்கி சண்டை மக்களிடம் கேலிக்கூத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

பொது அறிவுக் களஞ்சியம்

>> Wednesday, December 17, 2008

  • அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.
  • வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.
  • திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.
  • ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.
  • உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
  • மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.
  • சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.
  • ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.
  • ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.
  • வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
  • காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.
  • யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
  • தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.
  • ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.
  • கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.
  • சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.
  • பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.
  • பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். :) மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.
  • 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.
  • நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.
  • தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.
  • பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.
  • பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.
  • தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.

Read more...

அருகம்புல்லின் பயன்கள்

>> Tuesday, December 16, 2008

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.
குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

  • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  • சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  • நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • புற்று நோய்க்கு நல்ல மருந்து.
  • உடல் இளைக்க உதவும்இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

நன்றி!!!!

Read more...

Back to TOP